Skip to content

லாரி மோதி 8 வயது சிறுமி படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி லால்குடி அருகே உள்ள தாளக்குடி அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் மகபூப்பாஷா. இவரது 8 வயது சிறுமி சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி விபத்தானது. இந்த லாரியை லால்குடி நன்னிமங்கலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்தது தெரிய வந்தது.  இதில் சிறுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்டு  திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமியின் தந்தை மகபூப் பாட்ஷா அளித்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!