Skip to content
Home » உலக டெஸ்ட் சாம்பியன்……ஒடிசா விபத்துக்கு இரங்கல்…கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்……ஒடிசா விபத்துக்கு இரங்கல்…கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் முறை.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்  தொடங்கி உள்ளது. இந்திய வீரர் ஷமி முதல் ஓவரை வீசினார். ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், கவாஜா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
கடந்த 2ம் தேதி ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானார்கள். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு நாட்டு வீரர்களும் கைியல் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இடம்பெறவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!