Skip to content

மக்களவை தேர்தல்…. திமுக கூட்டணியில் அதிக இடம் கேட்போம்… காங். தலைவர் பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பவர் கே. எஸ். அழகிரி. சமீப காலங்களில் 5 வருடம்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக  பதவி வகித்தவர்  இவர்தான்.  5 வருடம் ஆன நிலையில் கே. எஸ். அழகிரி மாற்றப்பட உள்ளதாக பரவலாக தகவல் பரவி வருகிறது. தற்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள செல்வபெருந்தகையை  மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க இருப்பதாகவும்,  சட்டமன்ற கட்சி தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவனை நியமிக்க இருப்பதாகவும் கடந்த 2 தினங்களாக செய்தி  வெளிவந்த  வண்ணம் உள்ளது.

இது குறித்து கே. எஸ். அழகிரி ஒரு பேட்டியில் கூறியதாவது:

5 வருடமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன். நான் யாரிடமும் போய் எனக்கு பதவி நீட்டித்து தாருங்கள் என கேட்கவில்லை.  வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!