Skip to content
Home » சிறுமியிடம் அத்துமீறல்…தஞ்சை டிரைவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியிடம் அத்துமீறல்…தஞ்சை டிரைவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மேல காட்டூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (48). லாரி டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வீட்டில் தனியாக இருந்த 15 வயதான சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்று முறைகேடாக நடந்து கொண்டார். பின்னர் ஜெயராஜ் பிடியிலிருந்து தப்பி வந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து இதுகுறித்து சிறுமி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சர்மிளா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் சிறுமியை கடத்தி சென்று முறைகேடாக நடந்து கொண்ட ஜெயராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!