Skip to content

கரூர் … கோர்ட்டை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா பில் ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,வழக்கறிஞர்கள் கருப்பு சட்டை கருப்பு பேட்ச் அணிந்து,  கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!