Skip to content
Home » புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் தமிழக செய்தி மக்கள் தொலைதொடர்பு துறை சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பை மற்றும் அரசின் நாட்காட்டி ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதா ராமு,  மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, முத்துராஜா எம்.எல்.ஏ.,  நகராட்சி தலைவர்  திலகவதி செந்தில்,  மக்கள் தொடர்பு அதிகாரி சண்முகசுந்தரம் மற்றும் பலர் காந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:

ஆளுநருக்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு என்று ஆளுநர் பேசியிருப்பது தமிழக அரசுக்கும் தமிழக மக்களின் உணர்வுக்கும் கிடைத்த வெற்றி  என்றார்.

மேலும் சட்டத்துறை அமைச்சர் இருக்கும் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமையுமா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டபோது

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தற்போது அமைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை ஏனென்றால் புதுக்கோட்டையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்குடியில் சட்டக் கல்லூரி அமைக்கப்படுவதால் வருகின்ற நிதிநிலை அறிக்கையில்  அதற்கு வாய்ப்பில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!