Skip to content
Home » நிலத்தகராறு… விவசாயி கத்தியால் குத்திக்கொலை…..

நிலத்தகராறு… விவசாயி கத்தியால் குத்திக்கொலை…..

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள நாரணமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதி (53). விவசாயி. இவருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் அவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அஜித் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், அரக்கோணம் போலீசார் ஜோதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஜோதி வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அஜித், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அஜித் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா காவல் நிலைய போலீசார், கொலையான ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஜோதியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!