திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கோமாகுடியை சேர்ந்த சகாயராஜ் மகன் ஷாருக்கான்(24). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருடன் சேலத்தை சேர்ந்த திவ்யா என்ற மாணவியும் படித்து வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலானது. பின்னர் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் மாணவர்களாகவே இருந்து வந்தனர்.
6மாதமாக இப்படி ஒடிய நிலையில், சில தினங்களுக்கு முன் திவ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்த ஷாருக்கான், இவள் தான் என் மனைவி இனிமேல் இங்கே தான் இருப்பாள் என்றாராம். இதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
திவ்யாவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவ தம்பதியை கைது செய்தனர். ஷாருக்கானை சிறையில் அடைத்தனர். திவ்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.