Skip to content

காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆனந்தி மேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான ஆல்பர்ட் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 12ஆம் தேதி மாலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் ஆல்பர்ட் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆனந்தி மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!