Skip to content
Home » பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூர் கிராமம் கோவில் காடு என்ற இடத்தில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில்  சுகன்யா, கணவர்  அருண்குமார்,  2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்களது  சுகன்யா, தனது வீட்டிற்கு அருகில் உள்ள நடராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் தனது குழந்தைகள்
தனுஸ்ரீ (7), அகிலன் (4) ஆகிய இருவரையும்   தூக்கி வீசிவிட்டு, தானம் கிணற்றில் குதித்தார். மூவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.

சுகன்யாவின் கணவர் அருண்குமார் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய சரக எல்லையில் உள்ள ஒரு  நூல் மில்லில் எலக்ட்ரீக்கல் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். மூவரின் பிரேதத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,குழந்தையுடன் சுகன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!