Skip to content

கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்ததாக ஐதீகம் உண்டு. இக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிமாதத்தை ஒட்டி ஏக தின லட்சாா்ச்சனை நடந்தது. இதில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையொட்டி, அம்பாளுக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், அம்பாள் சன்னதி முன் பூப்பந்தல் அமைக்கப்பட்டது. கஞ்சனூா் நீலகண்ட சிவாச்சாரியாா் தலைமையில் கோயில் அா்ச்சகா் தியாகராஜ குருக்குள் உள்ளிட்டோா் லட்சாா்ச்சனை செய்தனா். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!