Skip to content
Home » கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவில்பாளையம் பகுதியில் உமாசங்கர் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்தை திருடிய வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். திருட்டில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என இணையதளத்தை பார்த்து கைவரிசை காட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். உமா சங்கரின் வீட்டின் கீழ் வசித்து வந்த சிவசங்கர் என்பவரது வீட்டிலும் 7.5 சவரன் நகை, ரூ.35,000 கொள்ளை போனது. விசாரணையில் உமா சங்கர் வீட்டின் கீழ் வசித்து வரும் சிவசங்கரே திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. சிவசங்கரின் செல்போனை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டு சிக்காமல் இருப்பது எப்படி என தேடிய விவரம் இருந்தது. திருட்டில் ஈடுபட்ட சிவசங்கர் கவிதா தம்பதியை கைது செய்து ரூ.9 லட்சத்தை போலீஸ் பறிமுதல் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!