Skip to content

மக்னா யானை… இங்கு விடக்கூடாது….. காரமடை பகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

கோவை பகுதியில்  ஊருக்குள் சுற்றி திரிந்த மக்னா யானை வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. தற்போது அந்த மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் யானையை காரமடை வெள்ளியங்காடு சாலைக்கு கொண்டு வந்தனர்.

முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் யானையை லாரியில் கொண்டுவந்த தகவல் அறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் லாரியை சிறைப்பிடித்து யானையை இங்கு விடக்கூடாது திருப்பி கொண்டு செல்லுங்கள் என வலியுறுத்தினர்.

யானையை இங்கு விட்டால் மீண்டும் ஊருக்குள் புகும் எனவே இந்த யானையை இங்கு விடக்கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி யானையை போலீஸ் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கொன்டு செல்லபட்டது.

தற்போது யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தபட்டது யானை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை அரசு மரக்கிடங்கில் லாரியுடன் நிறுத்திவைக்கபட்டுள்ளது.

யானையை எங்கு கொண்டு சென்று விடுவது என இதுவரை உயர் அதிகாரிகள் முடிவுக்கு எடுக்காததால் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!