Skip to content
Home » கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

  • by Senthil

கோவையில் வருமான வரித்துறை சோதனை நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முழுவதும் பத்து இடங்களில், பல்வேறு நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் Bull நிறுவனத்தின் உரிமையாளர் பொன்னுதுரை என்பவரின் இல்லத்தில் இன்று நான்காவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்/

உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வரும் லஷ்மி டூல்ஸ் உரிமையாளர் வரதராசன் என்பவரது இல்லதில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக நடத்திய சோதனையை முடித்துக் கொண்டனர். எனினும் அவரது உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களில், ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

நிறுவனத்திற்கான முறையாக ஆவணங்கள் உள்ளதா? வரிகள் செலுத்தப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் இரவு, பகலாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.ராவத்தூர் பிரிவு ,செலக்கரைசல், பாப்பம்பட்டி, அப்ப நாயக்கன்பட்டி, காங்கேயம் பாளையம்,துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!