Skip to content

கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

கோவை வ.உ.சி.மைதானத்தில்  பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.இது குறித்து மனாஸ் எண்டர்டெயின்மெண்ட் பங்கு தாரர்கள் முகம்மது இஸ்மாயில் அபுதாகீர்,ஜியா, பாண்டியன் , கூறியதாவது:

கோவை வ உ சி மைதானத்தில் முதல் முறையாக மனாஸ் என்டர்டைன்மென்ட் சார்பாக ஜங்கில் வேர்ல்டு (JUNGLE WORLD) பொருட்காட்சி வருகின்ற டிசம்பர் 21 ந்தேதி முதல் ஜனவரி 19 ந்தேதி வரை நடைபெற இருக்கின்றது நீர்வீழ்ச்சி நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சி பெரியவர் முதல் சிறியவர்கள் விளையாடி மகிழ்ந்திட வித விதமான ராட்டினங்கள் ஸ்னோ வேர்ல்டு 3D திகிலூட்டும் பேய் வீடு ,சுவைத்து மகிழ டெல்லி அப்பளம் பானி பூரி ஐஸ்கிரீம் கூல்டிரிங்ஸ் ,மதுரை ஜிகர்தண்டா போன்ற இருபதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள், 50 க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகள், சுட்டிக் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணி முதல் இரவு பத்து மணி வரை பொருட்காட்சி நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

error: Content is protected !!