Skip to content

தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக வழக்கத்தைவிட கூடுதலாக குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும் நேற்று தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் சுமார் 1,350 டன் குப்பை சேர்ந்துள்ளதாகவும் இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வும்,  இந்த குப்பைகள்  அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட குப்பைகள் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவம் நிலையில் சிலர் விடுப்பில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும் நாளை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடும் பட்சத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றம் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!