Skip to content
Home » காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

  • by Senthil

கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா(19). அவர் அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ரேஷ்மாவுடன் கல்லூரியில் படித்து வந்த குடியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராம் என்ற வாலிபர் ரேஷ்மாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரேஷ்மா பணிபுரியும் கனி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நேற்றைய தினம் சென்ற ஸ்ரீராம் தன்னை காதலிக்கும்படி ரேஷ்மாவிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர் காதலிக்க மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேஷ்மாவை கண்மூடித்தனமாக குத்தியுள்ளார். இதில் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் ரேஷ்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீராம் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் ரேஷ்மாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஸ்ரீராமை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!