Skip to content

கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

  • by Authour

கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கஞ்சா வழக்கு தொடர்பாக கையெழுத்து போடுவதற்காக கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் ஜே.எம். கோர்ட்டிற்கு வந்தார். பின்னர் கோகுல் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டு வெளியில் வந்தார். தொடர்ந்து கோகுல், மனோஜ் ஆகியோர் வக்கீலுடன் கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு டீ குடிக்க சென்றனர்.  அப்போது அவர்களுக்கு பின்னால் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள், அவர்கள் கோர்ட்டிற்கு வந்தவர்களாக இருப்பார்கள் என நினைத்து கடைக்கு நடந்து சென்றனர். கடையின் அருகே சென்று, பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கோகுலின் அருகே வந்தனர். வந்த வேகத்தில் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கோகுலை சரமாரியாக வெட்டினர். இதில் கோகுலின் கழுத்தில் கத்தி வெட்டு விழுந்தது. கத்தி அப்படியே கழுத்தில் மாட்டி கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சியான மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார்.  இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுங்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் இக்கொலை தொடர்பாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குற்றவாளிகளான 5 பேரையும் போலீசார் கைது  செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!