இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வரும் 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி நாட்களில் வீடுகள், கோயில்கள், முக்கிய அலுவலகங்களில் கொலு அமைக்கப் பட்டு வழிபாடு நடத்தப்படும். இதனையொட்டி புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில் சன்னதி மற்றும் வடக்கு ராஜ வீதியில் உள்ள கடைகளில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சுவாமி சிற்பங்கள், விலங்குகளின் உருவ பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என்று ஏராளமான பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி தொடங்க இன்னும் சில நாட்களே
உள்ள நிலையில் பொது மக்கள் கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கி
செல்கின்றனர்.
இதுபற்றி கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு புதுவிதமான பொம்மைகள் ஏராளமாக வந்துள்ளன. விலை சற்று அதிகரித்திருந்தாலும், மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் விற்பனை சூடுபிடித்துள்ளதுஎன்றார்.
