Skip to content
Home » கொல்கத்தா…. பயிற்சி மருத்துவர்கள் …. ஸ்டிரைக் வாபஸ்

கொல்கத்தா…. பயிற்சி மருத்துவர்கள் …. ஸ்டிரைக் வாபஸ்

  • by Senthil

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிகாலை நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்.  ஆனாலும்  மம்தா அரசு இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என  அந்த மாநில பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.  மேற்கு வங்கத்தில்  42 நாட்களாக நீடித்து வந்த பயிற்சி மருத்துவர்களின் போராட்டம்  இன்று முடிவுக்கு வந்தது. நாளை பணிக்கு திரும்புவதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!