Skip to content
Home » ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் கொடுக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு டில்லி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டில்லி அரசு வழக்கு தொடுத்துள்ளது.   இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை  டில்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இது தொடர்பாக சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!