Skip to content
Home » பெண் வேடமிட்டு கோயில் விழாவில் பங்கேற்கும் ஆண்கள்….கேரளாவில் வினோதம்

பெண் வேடமிட்டு கோயில் விழாவில் பங்கேற்கும் ஆண்கள்….கேரளாவில் வினோதம்

  • by Senthil

கேரளா மாநிலம்  கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த  விழாவில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பர். மகளிர் வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

மாலை முதலே ஆலயத்துக்கு படையெடுக்கும் ஆண்கள் கோயிலில் விற்கப்படும் 5 முக விளக்கை வாங்கி அதில் தீபம் ஏற்றி இரவு முழுவதும் கோயிலை சுற்றி வந்து வழிபட்டனர்.  இதற்காக ஆண்களுக்கு ஒப்பனை செய்வதற்காகவே பல ஒப்பனை கலைஞர்கள் கோயில் வாசலில் முகாமிட்டனர். அவர்களிடம் ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்கள் மிகவும் உற்சாகமாக இந்த பூஜையில் கலந்து கொண்டனர். சிறந்த ஒப்பனை செய்த ஆண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

முன்னொரு காலத்தில் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்ற சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காய் உடைத்தபோது அதில் இருந்து குருதி வழிந்ததாகவும் இது குறித்து ஊர் மக்கள் ஜோதிடரிடம் கேட்டபோது அது கல் அல்ல வனதுர்கா என்று தெரிவித்துள்ளார். அன்று முதல் அங்கு கோயில் எழுப்பி ஆண்டுதோறும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் மூங்கில்களால் கூரை அமைத்து அமைக்கப்பட்ட இந்த கோயில் பின்னர் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த நிலையில் கோயிலுக்குள் நுழைய ஆண்கள் பெண் வேடமிட்டு சென்றதால் காலப்போக்கில் அந்த வழக்கமே நிலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!