Skip to content
Home » கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

  • by Senthil

பொள்ளாச்சி தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம்,நடுப்புணி,கோவிந்தாபுரம்,மீனாட்சிபுரம் சோதனைச் சாவடிகள் உள்ளது. கிராமப் புறங்களில் நிறைந்த பகுதி என்பதால் கேரளாவில் மருத்துவமனையில் இருந்து லாரி,டாரஸ் லாரி மூலமாக மருத்துவக் கழிவுகள்,கோழி பண்ணை கழிவுகள் ஏற்றி தமிழக கேரளா எல்லைப்

பகுதியில் விவசாய தோட்டங்களில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர். இதை அடுத்து திவான்சா புதூர் பகுதியில் கேரளாவில் இருந்து ஏற்றி வந்த மருத்துவக் கழிவு டாரஸ் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.பொதுமக்கள் கொடுத்த புகார் பேரில் ஆனைமலை வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!