Skip to content
Home » கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

கெஐ்ரிவாலிடம் 50 கோடி கொடுத்தது ஏன்?.. சுகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு….

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு, ‘பாதுகாப்பு அளிப்பதற்காக’ ரூ.10 கோடி கொடுத்ததாக, டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு, சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சுகேஷ், ஆம் ஆத்மி கட்சி தலைவரை தனக்கு 2015-ம் ஆண்டு முதல் தெரியும் என்று எழுதி உள்ளார். தென்னிந்தியாவில் அவருக்கு முக்கியமான கட்சி பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதால், ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ.50 கோடி வழங்கியதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், பா.ஜ.க.வுக்கு எதிராக பேசும்படி நெருக்கடி கொடுக்கப்பட்டேன் என்று கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு எதிராக புதிதாக எழுதியுள்ள கடிதத்தில் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!