Skip to content

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசினார்.   இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்.  நடிகை கஸ்தூரியின் அவதூறான பேச்சுக்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கஸ்தூரி மீது சென்னை உள்பட 6  போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டார்.

அவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம்   விசாரணைக்கு வந்தது. கஸ்தூாிக்கு கடும் கண்டனம் தெரிவித்த கோர்ட்,  தீர்ப்பை தள்ளிவைத்தது.  இந்த நிலையில் இன்று காலை  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  கஸ்தூரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கஸ்தூரியை கைது செய்ய தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!