Skip to content
Home » கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஏஐடியுசி துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம்,எந்த தொழில் பணிபுரிந்தாலும் 21 ஆயிரம் குறைந்த சம்பளம் வழங்க வேண்டும்,நலவாரிய பதிவுகளை எளிமை படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய,மாநில

அரசுகளின் அடக்குமுறைகளை தூளாக்குவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்,தொடர்ந்து அரசுக்கு எதிராக கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஏஐடியுசி நபர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!