Skip to content

கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

100 கோடி ரூபாய் சொத்தை மிரட்டி பறித்த வழக்கில் கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  கேரள மாநிலம்  திருச்சூரில்  இன்று கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று மதியம் 2 .15 மணி அளவில் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.  நீலகலர் பேண்ட், அதே கலரில் டீ சர்ட் அணிந்திருந்தார்.

சிபிசிஐடி அலுவலகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு  போடப்பட்டு உள்ளது. அங்கு விஜயபாஸ்கரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  இன்று இரவு அல்லது நாளை அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்வார்கள் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!