Skip to content
Home » கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

  • by Senthil

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிந்தனர். இதையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். ஜூலை 16 ம் தேதி எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதே வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் முன் ஜாமீன் பெற்றிருந்தார்.
சேகரின் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2ம் தேதி சிபிசிஐடி போலீசார் கரூரில் எம்.ஆர்.சேகரை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இந்த நிலையில், வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரி பேரில், நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரக்கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக ஏற்கனவே தொடங்கப்பட்ட வழக்கில், திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர்.சேகர் வாங்கல் போலீஸாரால் இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகின்ற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!