Skip to content

கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டச்சியார் அலுவலகம் வளாகத்தில் காவல் துறையினர் விபத்து மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தில் குவிந்திருந்த குப்பைகளை தீயிட்டு எரித்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனங்கள் மீதும் தீ பற்றி கொண்டது. மலமலவன பரவிய தீயானது அங்கு நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் முழுவதுமாக பரவி எரிந்தது.

பைக்குகள் தீயில் எரிசlந்து வெடிக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீ பற்றி எரிவதை கண்டு முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் தீனை அனைத்து காட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!