Skip to content

கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் மதநல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு..

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர்

உறுதிமொழி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு மற்றும் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!