Skip to content
Home » கரூரில் டேபிள் டென்னிஸ் போட்டி….மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு..

கரூரில் டேபிள் டென்னிஸ் போட்டி….மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாள் கோவில் சாலையில் உள்ள வீனஸ் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் இன்று வருவாய் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை வீனஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

பள்ளியில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளும், 17 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளும், 19 வயதுக்குட்பட்ட மாணவ -மாணவிகளும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் கரூர் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், கொங்கு வெள்ளாளர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த

மாணவர்களும், பள்ளப்பட்டி அரசு பள்ளி மாணவர்களும், குறும்பும் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்தப் போட்டியில் கரூர், தாந்தோணி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய ஐந்து குறுவட்டங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!