Skip to content
Home » கரூர் வெண்ணைமலை கோவில் நிலத்தை மீட்கும் அதிகாரிகள்-பொதுமக்கள் வாக்குவாதம்

கரூர் வெண்ணைமலை கோவில் நிலத்தை மீட்கும் அதிகாரிகள்-பொதுமக்கள் வாக்குவாதம்

  • by Senthil

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் கடந்த மூன்று தினங்களாக அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவில் அருகில் அமைந்துள்ள 2 நிறுவனங்கள் மற்றும் 8 கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளதால், பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக பிரதிநிதிகளுடன் கோட்டாட்சியர் முகமது பைசல் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை உறுதியாக நடைபெறும் என பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட நிலையில் தற்போது கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மேலும் இரண்டு கடைகளுக்கு சீல் வைத்த பிறகு மேலும் ஒரு கடைகளுக்கு சீல் வைக்க சென்ற பொழுது பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!