Skip to content

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் பங்கேற்பு…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு 100க்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் தனித்தனியே அமர வைத்து வாழை இலை, விளக்கு திரி, விளக்கு எண்ணெய், மஞ்சள், பச்சை அரிசி, குங்குமம் உள்ளிட்ட பொருட்களை ஆலயத்தின் சார்பாக வழங்கி, அதன் தொடர்ச்சியாக திருவிளக்கு பூஜை சிறப்பாக தொடங்கியது. சிவாச்சாரியார் ஆலய திருவிளக்கு முன்பாக அமர்ந்து வேத மந்திரங்கள் ஓதியபடி குங்குமத்தால்

அர்ச்சனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பக்தர்களும் தங்களுடைய திருவிளக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்த பின் திருவிளக்குகளுக்கு தூப தீபங்கள் காட்டி, தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டினர். கரூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆலயத்தின் சார்பாக விபூதி, குங்கும பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!