Skip to content

கரூர் அருகே ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரம்..

கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள மலையில் வீற்று அருள்பாலிக்கும் ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத பெளர்ணமியை முன்னிட்டு அம்பாளுக்கும், சிவபெருமானுக்கும் விஷேச அபிஷேகம் மற்றும் அலங்காரங்களும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நட்சத்திர ஆரத்தி,

கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்திகளும், கும்ப ஆரத்திகளும் அதனை தொடர்ந்து மஹா தீபாராதனையும், நடைபெற்றது. பின்னர் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கார்த்திகை ஆழி தீபம் ஏற்றப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவபெருமான் மற்றும் அம்பாள் அருள் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!