கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பை – பாஸ் சாலையில் உள்ள நாரதகான சபாவில் கருவூர் ஸ்ரீ ருத்ர நாட்டியாலயா சார்பில் ஆடல் அரங்கம் பள்ளி மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நடராஜருக்கும், சலங்கைகளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரு நமஸ்காரத்தை தொடர்ந்து சலங்கை கால்களில் அனுபவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலி,
ஜதீஸ்வரம், பதவர்வணம், கீர்த்தனை, மயில் கவிதை, காவடிச்சிந்து, மங்களம் உள்ளிட்ட பரதநாட்டிய உறுப்புகள் மூலமாக தங்களது நடன திறமைகளை வெளிக்காட்டிய 7 மாணவிகளின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடைபெற்றது. இதனை ஏராளமான பரதநாட்டிய ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.