கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே ஆறுபடை என்ற பெயரில் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று காலை 2 இளைஞர்கள் மதுபோதையில் புரோட்டோ பார்சல் வாங்கிவிட்டு பணம் தராமல் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து ரோஸ்ட் கேட்டுள்ளனர்.
அதற்கு கடை உரிமையாளர் கந்தசாமி பில் கேட்டதாகவும், அதற்கு பில் இல்லை தரமாட்டியா என கேட்டுள்ளனர். பாக்கிக்கு தரமுடியாது என கூறியதற்கு கடையை அடிச்சு நொறுக்கிவிடுவோம் என மிரட்டி. இருவரும் ஹோட்டல் உரிமையாளர் சட்டையை பிடித்து இழுத்து
சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கடையின் முன்பக்கத்திலிருந்த முட்டைகள் வைத்திருந்த அட்டைகளை கட்டையால் அடித்தும், அருகில் உள்ள டிவி ரிப்பேர் செய்யும் கடையின் முன்பக்கத்தில் இருந்த டிவி களை கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் ஹோட்டலில் இருந்த பெண்ணையும் தகாத வார்த்தையால் பேசியவாறு அங்கிருந்து பைக்கில் கிளம்பி சென்றுள்ளனர்.
இது குறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஒரு இளைஞரை மட்டும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.