Skip to content

கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

கரூரில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை ,ஜவஹர் பஜார் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் இருபுறத்திலும் கயிறு அடிக்கும் மார்க்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது .சாலையில் பார்க்கிங் பகுதியில் மட்டும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவேண்டும் அந்தந்த கடை உரிமையாளர்கள் அவர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை முறையாக வாகனம் நிறுத்த அறிவுறுத்த வேண்டும் .இரண்டு நாட்களாக அவர்களுக்கு

எச்சாரிக்கை கொடுத்ததும் பயனில்லை நாளைமுதல் கடுமையாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . மேலும் முறையாக நிறுத்தப்ப்டாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் . தீபாவளிப்பண்டிகைக்கு போலீஸ் ரோந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .24 மணிநேரம் இயங்க கூடிய கண்காணிப்பு அறை திறக்கப்படவுள்ளதாகவும் . விழா கால குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க போவதாக எஸ் பி பிரபாகரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!