Skip to content
Home » கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Senthil

கரூர் மாவட்டம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 02.08.2024 ஆம் தேதி பதிவான வழக்கில் பாலியல் குற்றச் செயலில் தொடர்புடைய முருகானந்தம், 45/24, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கின் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கரூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து குற்றங்கள் குறித்தும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மைய எண்.1098 அல்லது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக எண்.9498100780 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது புகாரை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு Good Touch மற்றும் Bad Touch பற்றி தெளிவாக எடுத்துரைக்கவும், குழந்தைகள் செல்போன்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவும், பெண் குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!