Skip to content

கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… வாலிபர் பலி..

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையத்தை அடுத்த மலையம்பாளையம் பிரிவு அருகே சுமார் 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சேலம் நோக்கி இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனம் நொருங்கிய நிலையில், அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இரத்த காயங்களுடன் இளைஞர் உடல் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து போன இளைஞர் பெயர் பஞ்சமூர்த்தி என்றும், கன்னியாக்குமரி மாவட்டம், கூடலூரை அடுத்த மீனாட்சிப் பேட்டை, வைத்தி முதலி தெருவை சார்ந்தவர் என்றும், விவசாய கூலி வேலை செய்து வரும் இவர், பாஸ்போர்ட் எடுக்கும் வேலையாக வெளியூர் செல்வதாக அவரது அம்மாவிடம் தெரிவித்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!