Skip to content

கரூர் அருகே புதிய வகுப்பறைகள் கட்டும் பணி…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு துவக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவக்க விழா இன்று நடைபெற்றது.

அதன்படி கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.91 கோடி மதிப்பில் புதிய 10 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடவூர், பூஞ்சோலை பட்டி, தூளிப்பட்டி, அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அரசு

துவக்கப் பள்ளிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினையும் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி மோகன், மக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி தலைமை ஆசிரியர் இருபால் ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!