Skip to content

பிளக்ஸ் கிழிக்கப்பட்டதால் பிரச்சனை… கரூரில் இருதரப்பு மோதல்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனை சிலர் கிழித்துள்ளனர். கிழித்தது மாற்று சமூகத்தினர் என வதந்தி கிளம்பியது. இது தொடர்பாக காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள் முடிவெடுத்து இனிமேல் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். இன்று காலை அந்த பகுதியில் மாற்று சமூகத்தினர் வந்தபோது இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் கைகலப்பாக மாறியது. இது தொடர்பாக இருதரப்பினரும் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ வைரலானது. மேலும் கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பையும் மீறி மோதல் ஏற்பட்டது எப்படி? என பாதிப்பிற்குள்ளான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!