Skip to content

கரூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

கரூர், தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள நஞ்சக்காளி குறிச்சிக்கு ஊராட்சிக்கு உட்பட்ட கரைப் பசுபதிபாளையம் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்

இந்த பகுதியில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது மேலும் சில காலமாகவே ஆள் துணை கிணறுகள் பழுது அடைந்துள்ளதால் அதை சரி செய்ய சொல்லி பலமுறை ஊராட்சி மன்ற தலைவருக்கு மனு கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளதால் பள்ளி மாணவ,மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.

பொதுமக்கள் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் தாராபுரம் செல்லும் புறவழி சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சின்னதாபுரம் காவல் துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன் போரில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!