கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் அமராவதி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கம்பத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாலை 5.00 மணி அளவில் ஆலயத்தில் இருந்து பல்லக்கில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கம்பம் சுமார் 7.30 மணியளவில் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் விடப்பட்டது.
கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியை காண வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வழியெங்கும் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் அமராவதி ஆற்றில் கம்பம் விடப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வான வேடிக்கை நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.