Skip to content

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முக்கிய நிகழ்வாக கருதப்படும் அக்கினி சிட்டி எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

அதிகாலை முதலே அமராவதி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் நீராடி மஞ்சள் உடையணிந்து தங்களது நேர்த்திக்கடனான அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக அமராவதி ஆற்றில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு முக்கிய வீதியில் வழியாக நடந்து சென்று தங்களது நேத்திக்கடனை செலுத்தினர்.

ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் முதல் நாள் அக்கினி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் நகர போலீசார் பாதுகாப்பு பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணிகளிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.  விழா ஏற்பாடுகளை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள்  சிறப்பான முறையில்  செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!