Skip to content
Home » கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

  • by Senthil

தொழில் நகரமான கரூரையும் கோவையும் இணைக்கும் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள், தொழிலதிபர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை எடுத்து வந்தனர். அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 137 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது இதையடுத்து கரூர் கோவை நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கரூர் அருகிலுள்ள கோவிந்தம்மாளையத்தில் தொடங்கி கரூர் மாவட்ட எல்லையான தென்னிலை அருகில் உள்ள எல்லைக்காட்டு வலசு வரை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு

தற்சமயம் உள்ள சாலை, 26 மீட்டர் அகலப்படுகிறது. இதன் மூலம் இரண்டு வழிச்சாலையாக உள்ள கோவை கரூர் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றம் பெறும். இதற்காக சாலையின் இரு புறமும் மண் அகற்றப்பட்டு அங்கு ஜல்லி கலவை கொட்டப்பட்டு புதிய சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதே போல இந்த சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள கழிவு நீர் வெளியேற்றும் கால்வாய்கள்,மழை நீர் வெளியேற்றும் கால்வாய்களும் அகலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் உள்ள கழிவு நீர் வெளியேற்றும் வகையில் உரிய வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் பெரியசாமி கோரிக்கை விடுத்ததையடுத்து, தேசிய நெடுஞ்சாலைய ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, கழிவு நீர் வெளியேறும் வகையில் உரிய வகையில் கால்வாய் அமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படும் உறுதி அளித்தனர். மேலும் 18 மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!