Skip to content

கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

  • by Authour

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சித்திரை 1ஆம் தேதி ஸ்ரீ சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 1100 கிலோ அளவிலும் மற்றும் செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் 1000 கிலோ அளவு காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

கேரட், பீட்ரூட், உருளை, பச்சை மிளகாய், வாழைக்காய், நெல்லிக்காய், வெண்டைக்காய், செவ்வாழை, மாங்காய், தக்காளி,

சாத்துக்குடி, மாதுளை, எலுமிச்சை, அண்ணாசி, தர்ப்பூசணி, கத்திரிக்காய் உள்ளிட்ட 20க்கும் மேலான பல்வேறு வகையான காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அதைத்தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதணை நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற காய்கறி, பழ வகை அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!