Skip to content

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை

திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் சாமிக்கு நாமாவளிகள் கூறிய பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு நடைபெற்ற ஐப்பசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!