Skip to content
Home » க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், பெறாமளும் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்துள்ளது குப்பம் கிராமத்தில் சண்முகம் மற்றும் தேவராஜ் என்பவர்களுக்கு சொந்தமான நிலங்களில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையிலும், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த குவாரிகள் அருகில் வசிக்கும் விவசாய பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குவாரியின் உரிமையாளர்களின் ஆதரவாளர்களில் ஒரு சிலர் கூறினாலும், அனுமதி அளிக்கக் கூடாது என அப்பகுதி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுக்கடுக்கான ஆதாரமான ஆவணங்களுடன் பேசிய சமூக ஆர்வலர் முகிலன், 40 ஆவணங்கள் அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என விதி இருக்கும் பட்சத்தில் 10, 12 ஆவணங்கள் மட்டுமே சமர்பிப்பதாகவும், அதில் பலவற்றை மறைத்து ஆவணங்கள் சமர்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், அண்டை மாவட்டங்களில் இது போன்று கருத்து கேட்புக் கூட்டங்களில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் நிலையில், தற்போது நடைபெறும் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டங்களில் ஆட்சியர் இதுவரை ஒரே ஒரு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளதாகவும், பல கூட்டங்களில் முந்தைய ஆட்சியர் பிரபு சங்கரும், தற்போதைய ஆட்சியர் தங்கவேல் பங்கேற்பது இல்லை என குற்றச்சாட்டு எழுப்பினார்.

தேவராஜ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரிக்கு அருகில் வசிப்பவர்களை மிரட்டுவது, பொது மக்களுக்கு தெரிவிக்காமல் வெடி வைப்பது, வாகனங்களை ஏற்றி கொலை செய்ய முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளில் குவாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அதே போன்று தற்பொழுது தேவராஜன் அவர்களுக்கு சொந்தமான கல்குவாரி கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் செயல்பட்டு வருகிறது ஆனால் அதற்கு தற்பொழுது வரை மின் இணைப்பு இல்லாத சூழ்நிலையும் குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரிக்கு 100 மீட்டர் அருகாமையில் வீடுகள் உள்ளது இதில் வெட்டி யெடுக்கும் பாறைகள் வீடுகளில் விழுவதால் தாங்கள் அப்பகுதியில் வசிப்பதற்கு ஆபத்தாக உள்ளதும் என்று தெரிவித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் கேள்வி கேட்ட போது, இது தொடர்பான வீடியோக்களையும், கூட்ட விளக்கங்களையும் மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டுக் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அவர்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கூறினார். மேலும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் அலட்சியமாக முகத்தில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!