Skip to content
Home » கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

கரூரில் ஐடி சோதனை….. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரின் சகோதரர்  வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மதுபான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் (அதிமுக ஆட்சிகாலத்தில்) வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சிறப்பு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக கவர்னரிடம் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார். அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரினார்.

அதிமுக பொதுசெயலர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும்  இதே கருத்தை வலியுறுத்தி இருந்தனர். அதிமுக சார்பில் சமீபத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி  சென்று புகார் மனு அளிக்கப்பட்டது. . இந்நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  தம்பி வீடு மற்றும் நண்பர்களின்  அலுவலகங்களில் இன்று (மே 26 2023) ரெய்டு நடந்து வருகிறது. சென்னை, கோவை, கரூர் மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.

தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும்மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது. வருமானவரித்துறை இதுவரை சோதனை செய்த போது லோக்கல் போலீஸை பாதுகாப்புக்கு அழைத்துச் செல்வது வழக்கம் ஆனால் இந்த முறை எந்த போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் திடீரென நுழைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவர் செந்தில் பாலாஜி வீட்டிற்குள்  கைப்பையுடன் உள்ளே நுழைந்ததை பார்த்த  செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்  அந்த அதிகாரியிடம் நீங்கள் யார் என  கேட்டனர்.அதற்கு அவர் ஐடி  ஆபீசர் என்றார். அப்படியானால் அடையாள அட்டையை காட்டுங்கள் என கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால்  அவர் வைத்திருந்த  கைப் பையை சோதனை செய்தனர்,  அதிகாரியின் அடையாள அட்டையை  கேட்டு முற்றுகையிட்டனர்.

வழக்கமாக  ஐடி அதிகாரிகள் மத்திய போலீசாரை பாதுகாப்புக்கு அழைத்து வருவார்கள். ஆனால் இன்று எந்த போலீசும் உடன் வரவில்லை. லோக்கல் போலீஸ் பாதுகாப்பும்  இல்லாமல் வருமானவரித்துறையினர் சென்றதால் இவர்கள் உண்மையிலேயே வருமானவரி அதிகாரிகள் தானா, அல்லது அரசியல் எதிரிகள் இப்படி வருகிறார்களா  என தொண்டர்கள் சந்தேகித்ததனர். இது   தான் இந்த முற்றுகை நடக்க  காரணமாக அமைந்து விட்டது.

செந்தில்பாலாஜி மீது இது வரை நடந்த வருமான வரி சோதனைகள் எத்தனை தெரியுமா?

2016ம் ஆண்டு செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் போது தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட போது இதே போன்று வருமான வரிசோதனை நடைபெற்றது.

2017 ம் ஆண்டு செந்தில்பாலாஜி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவாக இருந்த போது.. அவருடை நண்பர்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரிசோத நிர்வாகிகள்  வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போதும் செந்தில்பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது. 2023 தற்போது திமுக அமைச்சராக இருக்கும் தற்போது அவரது சகோதரர் வீடு உள்பட  40 இடங்களில்  சோதனை நடைபெறுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!