Skip to content

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை …

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீயணைப்பு துறையின் சார்பில் செயல் விளக்கம் அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்தின் போது பாதுகாப்பாக இருப்பது குறித்து, செவிலியர்கள், மருத்துவபணியாளர்களுக்கு தீயணைப்பு துறையின் சார்பில் செயல் விளக்கம் அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் மாவட்டம் தீயணைப்பு துறையின் சார்பில்

மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் தீ பற்றி கொண்டால் அதை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கரூர் காந்திகிராமம் பகுதி அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் மீட்பது குறித்து செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக தீ பற்றிக்கொண்டால் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், ஈரத்துணியை வைத்து மட்டுமே அணைக்க வேண்டும், இல்லையென்றால் தீ, தடுப்பு சாதனங்களை கொண்டு பாதுகாப்பான முறையில் தீயை அணைக்க வேண்டும், மீட்பு பணிக்காக எந்த நேரத்திலும் தீயணைப்பு துறையினர் அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!